காதலுக்காக காத்திருப்பது சுகமே! உண்மையான காதலுக்காக காத்திருப்பதில் ஒரு அழகு இருக்கிறது. அவ்வாறு காத்திருப்பவரையும் அழகுபடுத்தி, அவர் பலவிதமான நல்காரியங்களை செய்ய வைக்கிறது. ஆகவே உண்மையான காதலுக்காக ஏன் காத்திருக்க வேண்டும் என்பதை பார்க்க காதல் என்பது ஒரு இனிமையான அனுபவம். பருவம் வந்த ஒரு இளைஞனும், ஒரு இளம் பெண்ணும், ஒருவருக்கு ஒருவர் மையல் கொள்ளும் போது இந்த காதல் துளிர்க்கிறது. உண்மையான காதல் வளர்வதற்கு சில முக்கியமான காரணிகள் தேவைப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் காதலுக்காக காத்திருப்பது ஆகும். காதலுக்காகக் காத்திருப்பதைப் பற்றி ஏராளமான கருத்துகளும், விமர்சனங்களும் உள்ளன. சிலர் காதலுக்காகக் காத்திருப்பது என்பது ஒரு போற்றத்தக்க மதிப்பீடு என்றும், மதிப்புக்குரியது என்றும் நம்புகின்றனர். அதே நேரத்தில் வேறு சிலரோ, இது நேரத்தை வீணடிக்கும் செயல் என்று கருதுகின்றனர். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், காதலில் காத்திருப்பது என்பது நமது முழு ஆற்றலையும் செலவழித்து, இறுதியில் ஒன்றுமே பெறாமல் இழப்பது ஆகும் என்று நம்புகின்றனர். பொதுவாக, ஒருவருடைய காதலுக்காக மற்றும் அவருடைய காதல் உறவிற்காக அவர்...
Posts
Today's Trending
சின்ன பொண்ணு சார்
- Get link
- X
- Other Apps
தெரு ஓரமாக என் வாகனத்தை நிறுத்தி விட்டு, பொருட்கள் வாங்கிக் கொண்டு காரை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு பெரியவரும் ரோடை கிராஸ் செய்து கொண்டிருந்தார். அவரை பார்த்திருக்கிறேன். தர்பூசணியை வண்டியில் வைத்து கூறுபோட்டு விற்பவர். சில சமயம் பலாப்பழமும் விற்பார். வண்டி அருகில் அவர் மனைவி அமர்ந்திருந்தார். மனைவிக்கும் தனக்கும் காலை டிபன் எதிரிலிருக்கும் சிறு ஹோட்டலில் வாங்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். அவர் நடுரோட்டில் வந்து கொண்டிருந்த போது, ஒரு ஸ்கூட்டர் வேகமாக வந்து அவரருகில் சடாரென்று பிரேக் போட்டு நின்றது. ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டு வந்தது இளம்பெண். கோபத்தோடு முகம் சிவக்க, அந்த பெரியவரை கடுமையான சொற்களால் திட்டிவிட்டு, வேகமாக சென்று விட்டார். என்ன தான் தவறு அந்தப் பெரியவர் மீது இருந்தாலும், அவ்வளவு மரியாதை குறைவாக அந்த பெண் திட்டி இருக்க வேண்டியதில்லை. ஸ்கூட்டர், அருகில் வந்து சட்டென்று நின்ற அதிர்ச்சியில், அவர் வாங்கி வந்த உணவுப் பொட்டலமும் கீழே விழுந்துவிட்டது. முகத்தில் வருத்தத்துடன், உணவு பொட்டலங்களை குனிந்து எடுத்துக் கொண்டு தன் கடையை நோக்கி செ...
அன்னப்பறவை
- Get link
- X
- Other Apps
அன்னப்பறவை ஒரு காட்டில் வாத்து குடும்பம் ஒன்று இருந்தது. அதில் அம்மா வாத்து முட்டையிட்டு, அடைகாத்து குஞ்சு பொறித்தது. பிறந்த குஞ்சுகள் அனைத்தும் அடர்ந்த, பல வண்ணங்கள் கொண்ட முடியுடன் அழகாவும், துறுதுறுப் பாகவும் இருந்தன. ஆனால், அதில் ஒரு குஞ்சு மட்டும் மெலிந்து அழகும், அடர்த்தியும் இல்லாத முடியுடன் அசிங்கமாக இருந்தது. அதன் குரலும் மற்ற குஞ்சுகள் போல் இல்லாமல் வித்தியாசமாக ஒலித்தது. உடன் பிறந்த வாத்துக் குஞ்சுகளுக்கு இந்த அசிங்கமான வாத்துக் குஞ்சைக் கண்டாலே பிடிக்க வில்லை. ஒரு கட்டத்தில் அதன் தாய் வாத்தே கூட அதை வெறுத்து, அதை மட்டும் ஒதுக்கி விட்டு மற்ற குஞ்சுகளுடன் நீந்தியது. அசிங்கமான வாத்துக் குஞ்சு மிகவும் வேதனை அடைந்தது. நான் மட்டும் ஏன் இப்படி அவலட்சணமாக பிறந்தேன்? முட்டையிலேயே உடைஞ்சு இறந்து போயிருக்கலாமே!’ என்று வேதனையுடன் பல நாட்கள் அழுது கதறியது. நாட்கள் ஓடின. மற்ற வாத்துக் குஞ்சுகள் வளர வளர மேலும் அழகாயின. இதுவோ உயரமாகவும் மேலும் நிற மற்றும் காணப்பட்டது. தலையில் வேறு குச்சிகள் போல ஓரிரு கொண்டை முடிகள் வேறு வளர்ந்தது, அதை இன்னும் அசிங்க...
இரு பொக்கிஷம்
- Get link
- X
- Other Apps
ஆசிரமத்துக்கு அருகே இருந்த ஊர் ஒன்றில் மிகப்பெரிய செல்வந்தன் ஒருவன் இருந்தான். நான்கைந்து வியாபாரங்கள் செய்து வந்தான் அவன். அவனது போதாத காலம். ஒரு வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. அதைச் சரி செய்வதற்குள் கவனம் பிசகி, மற்ற தொழில்களிலும் அடுத்தடுத்து சரிவுகளைச் சந்தித்தான். பிரச்னைகளைச் சமாளிக்க வாங்கிய கடன்கள் அவனது நிம்மதியைக் குலைத்தன. தொடர்ந்து கடன் மேல் கடனாக வாங்கிக்கொண்டே போனான். அப்படியும் சமாளிக்க முடியவில்லை. ஒருநாள் மொத்தமாக முடங்கிப்போனான். வீடு, வாசல், சொத்து, சுகம் எல்லாம் இழந்து நடு வீதிக்கு வந்துவிட்டான். விரக்தியில் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் மோசமான முடிவுக்கும் அவன் வந்திருந்தான். அதற்கு முன்னர். தனக்கு விடிவு காலம் பிறக்குமா என்று தெரிந்துகொள்ளும் ஏக்கத்திலும், நல்ல காலம் பிறக்கும் என்று தெரியவந்தால், தற்கொலை செய்துகொள்ளும் முடிவை தள்ளிப்போடலாம் என்ற எதிர்பார்ப்பிலும் குருநாதரைச் சந்திக்க வந்தான். ஒடுங்கிப்போன மனிதனாக குருவின் முன் நின்றான். குருவை வணங்கினான். “எனக்கு மறுவாழ்வு கிடைக்குமா ஸ்வாமிகளே” என கண்ணீருடன் கைகூப்பிக் கேட்டான். அதற்கு முன்பு பலமுறை செல்வந...
ரவா கேசரி
- Get link
- X
- Other Apps
ரவா கேசரி தேவையான பொருட்கள்: ரவை – ஒரு டம்பளர் சர்க்கரை – 2 டம்பளர் தண்ணீர் – ஒன்றரை டம்பளர் நெய் – அரை டம்பளர் முந்திரிப் பருப்பு- 10 ஏலக்காய் – 4 கேசரி பவுடர் – ஒரு தேக்கரண்டி பன்னீர் – 2 தேக்கரண்டி செய்முறை: முந்திரியை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். ஏலக்காயை தூள் செய்து கொள்ளவும். நெய்யை உருக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து 2 தேக்கரண்டி நெய் ஊற்றி நறுக்கிய முந்திரியை பொன் நிறமாக வறுத்துக் கொள்ளவும். அதேநெய்யில் ரவையைக் கொட்டி நன்றாக வறுக்கவும். தண்ணீரைக் கொதிக்க வைத்து வறுத்த ரவையில் ஊற்றி, கட்டியாகாமல் நன்றாகக் கிளறவும். ரவை நன்றாக வெந்ததும்,சர்க்கரையை சேர்த்துக் கிளறவும். கேசரி பவுடரை தண்ணீல் கரைத்து ஊற்றவும், பன்னீரையும் சேர்க்கவும். உருக்கிய நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக கேசரியில் ஊற்றிக் கிளறிக் கொண்டே வரவும். வறுத்த முந்திரி, பொடித்த ஏலக்காயைச்சேர்த்துக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கி விடவும்.