கொரோனா எதிரொலி: 5 கிலோ கோழி இறைச்சி ரூ.100க்கு விற்பனை!


கொரோனா எதிரொலி: 5 கிலோ கோழி இறைச்சி ரூ.100க்கு விற்பனை!

Image

கொரோனா குறித்த வதந்தியால் ஏற்றம் காணாத கோழி இறைச்சியின் விலையால் வியாபாரிகள் சோகமடைந்துள்ளனர். 

கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து தமிழகத்தில் பேச தொடங்கியதில்  இருந்து கோழி இறைச்சி மற்றும் அது சார்ந்த பொருட்களின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல், கோழி இறைச்சியின் மூலம் தான் என்று கிளம்பிய வதந்தியை அடுத்து, கோழி இறைச்சி மீதான மோகம் குறைந்து வருகிறது. கோழியின் மூலம் கொரோனா பரவல் இல்லை என விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில், சென்னையில் பொது மக்களுக்கு இலவசமாக சிக்கன்  வழங்கும் சுவாரசியமான நிகழ்வெல்லாம் அரங்கேறியது. 

photo

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 5 கிலோ கோழி இறைச்சி, ரூ.100க்கு விற்றும் வாங்க யாரும் ஆர்வம் காட்டாதது வியாபாரிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதையடுத்து கோழி இறச்சி விற்பனை கூடங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. சுமார் 8 ஆண்டுகளில் இல்லாத அளவில், முட்டையின் விலையும் சரிந்துள்ளது.

Comments

Popular posts from this blog

கண்களையும் கவனியுங்கள்

நண்பர்கள் தின வரலாறு..!

காதலுக்காக காத்திருப்பது சுகமே!