மனைவிக்கு கணவர் மேல் கோபம் வரலாம். ஆனால் வெறுப்பு.... கூடாது


பலர் பார்க்க ஆதர்ஷ தம்பதியர் போல் தெரிந்தாலும், கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தாலோ அல்லது புலம்பலை கேட்க ஆரம்பித்தாலோ நம் தலையே கிறுகிறுக்க ஆரம்பித்து விடும்.

வாழ்க்கை பற்றி சரியான புரிதல் இல்லாதத காரணத்தால், அவ்வளவு வெறுப்பு, ஒருவர் மேல் இன்னொருவருக்கு. இது கணவன், மனைவி இருவருக்கும் பொருந்தும்.

மாற்றிக் கொள்ள இயலாதவற்றை அப்படியே அனுசரித்து கொள்ளலாம். மாற்றிக்கொள்ளக் கூடியதை மாற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழலாம்.

வெறுப்புக்கு எவ்வளவோ காரணங்கள் இருந்தாலும், முக்கியமான 7 மட்டும்.

1. குறை சொல்வது.

நடை, உடை, பாவனையை குறை சொல்வது.
குடும்பத்தினர் நிச்சயித்த திருமணமோ, காதல் திருமணமோ... "பாத்துப்பாத்து தானே கல்யாணம் செஞ்சீங்க, இப்ப என்ன புதுசா?" என்ற வெறுப்பு. சமையலில் குறையெல்லாம் இப்போது யாரும் சொல்வதில்லை, குக் வித் கோமாளியை பார்த்து மிரண்டு போயிட்டாங்க.

2. திட்டுவது.

கோபத்தில் தகாத வார்த்தைகளால் திட்டுவது. அதைவிட நக்கலாக/கேலியாக பேசுவது இன்னும் வெறுப்பை வளர்க்கும்.

3. பொய் சொல்வது, ஏமாற்றுவது.

ஒரு முறை நம்பிக்கை இழந்து விட்டால், கடவுளே வந்து சாட்சி சொன்னாலும்... ம்ஹூம், சான்ஸே இல்ல.

4. மற்ற பெண்களை பார்ப்பது.

மனைவி அருகில் இருக்கும் போதே மற்ற பெண்களை ஆ.... வென முழிச்சு முழிச்சு பார்த்தால், பார்வதியே ஆனாலும் படியளக்கும் பரமசிவன் கதி… அதோகதி தான்.

5. சுயமாக எந்த முயற்சியும், முடிவும் எடுக்காதது.

எல்லா விஷயங்களிலும் தன் பெற்றோர், உடன்பிறந்தவர்கள், நண்பர்கள் என்று யாராவது சொல்வதை கேட்பது. குறிப்பாக வாழ்க்கை துணையின் ஆலோசனைகளை உதாசீனப்படுத்துவது.

6. ஊர் சுற்றல்.

சம்பாதிக்காமல், வேலையில்லாமல் ஊர் சுற்றினாலும் சரி, சம்பாதிக்க ஊர்ஊராக சுற்றுவதே வேலையாக இருந்தாலும் சரி ஒரு கட்டத்தில் வெறுப்பு வர வாய்ப்புள்ளது.

7 சுகாதாரம்.

அடிப்படை உடல் சுகாதாரம், உடை, பழக்க வழக்கம், உணவு. இதைப்பத்தி தனியா நான் சொல்லனுமா?

ஆரம்பத்திலேயே மனவருத்தத்தை சரி செய்தல் வேண்டும். வெறுப்பு என்னும் சிறுவிதை துளிர் விட ஆரம்பிக்கும் போதே கிள்ளி எளிய வேண்டும்.

மரமாக வளர்த்து.... சேதாரம் அதிகமாக விடக்கூடாது.

Comments

Popular posts from this blog

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

இரு பொக்கிஷம்