Posts

Showing posts from April, 2025

சின்ன பொண்ணு சார்

  தெரு ஓரமாக என் வாகனத்தை நிறுத்தி விட்டு, பொருட்கள் வாங்கிக் கொண்டு காரை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு பெரியவரும் ரோடை கிராஸ் செய்து கொண்டிருந்தார். அவரை பார்த்திருக்கிறேன். தர்பூசணியை வண்டியில் வைத்து கூறுபோட்டு விற்பவர். சில சமயம் பலாப்பழமும் விற்பார்.  வண்டி அருகில் அவர் மனைவி அமர்ந்திருந்தார். மனைவிக்கும் தனக்கும் காலை டிபன் எதிரிலிருக்கும் சிறு ஹோட்டலில் வாங்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். அவர் நடுரோட்டில் வந்து கொண்டிருந்த போது, ஒரு ஸ்கூட்டர் வேகமாக வந்து அவரருகில் சடாரென்று பிரேக் போட்டு நின்றது.  ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டு வந்தது இளம்பெண். கோபத்தோடு முகம் சிவக்க, அந்த பெரியவரை கடுமையான சொற்களால் திட்டிவிட்டு, வேகமாக சென்று விட்டார்.  என்ன தான் தவறு அந்தப் பெரியவர் மீது இருந்தாலும், அவ்வளவு மரியாதை குறைவாக அந்த பெண் திட்டி இருக்க வேண்டியதில்லை. ஸ்கூட்டர், அருகில் வந்து சட்டென்று நின்ற அதிர்ச்சியில், அவர் வாங்கி வந்த உணவுப் பொட்டலமும் கீழே விழுந்துவிட்டது. முகத்தில் வருத்தத்துடன், உணவு பொட்டலங்களை குனிந்து எடுத்துக் கொண்டு தன் கடையை நோக்கி செ...

அன்னப்பறவை

Image
அன்னப்பறவை  ஒரு காட்டில் வாத்து குடும்பம் ஒன்று இருந்தது. அதில் அம்மா வாத்து முட்டையிட்டு, அடைகாத்து குஞ்சு பொறித்தது. பிறந்த குஞ்சுகள் அனைத்தும் அடர்ந்த, பல வண்ணங்கள் கொண்ட முடியுடன் அழகாவும், துறுதுறுப் பாகவும் இருந்தன. ஆனால், அதில் ஒரு குஞ்சு மட்டும் மெலிந்து அழகும், அடர்த்தியும் இல்லாத முடியுடன் அசிங்கமாக இருந்தது. அதன் குரலும் மற்ற குஞ்சுகள் போல் இல்லாமல் வித்தியாசமாக ஒலித்தது.   உடன் பிறந்த வாத்துக் குஞ்சுகளுக்கு இந்த அசிங்கமான வாத்துக் குஞ்சைக் கண்டாலே பிடிக்க வில்லை. ஒரு கட்டத்தில் அதன் தாய் வாத்தே கூட அதை வெறுத்து, அதை மட்டும் ஒதுக்கி விட்டு மற்ற குஞ்சுகளுடன் நீந்தியது. அசிங்கமான வாத்துக் குஞ்சு மிகவும் வேதனை அடைந்தது. நான் மட்டும் ஏன் இப்படி அவலட்சணமாக பிறந்தேன்? முட்டையிலேயே உடைஞ்சு இறந்து போயிருக்கலாமே!’ என்று வேதனையுடன் பல நாட்கள் அழுது கதறியது.   நாட்கள் ஓடின. மற்ற வாத்துக் குஞ்சுகள் வளர வளர மேலும் அழகாயின. இதுவோ உயரமாகவும் மேலும் நிற மற்றும் காணப்பட்டது. தலையில் வேறு குச்சிகள் போல ஓரிரு கொண்டை முடிகள் வேறு வளர்ந்தது, அதை இன்னும் அசிங்க...

இரு பொக்கிஷம்

ஆசிரமத்துக்கு அருகே இருந்த ஊர் ஒன்றில் மிகப்பெரிய செல்வந்தன் ஒருவன் இருந்தான். நான்கைந்து வியாபாரங்கள் செய்து வந்தான் அவன். அவனது போதாத காலம். ஒரு வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. அதைச் சரி செய்வதற்குள் கவனம் பிசகி, மற்ற தொழில்களிலும் அடுத்தடுத்து சரிவுகளைச் சந்தித்தான். பிரச்னைகளைச் சமாளிக்க வாங்கிய கடன்கள் அவனது நிம்மதியைக் குலைத்தன. தொடர்ந்து கடன் மேல் கடனாக வாங்கிக்கொண்டே போனான். அப்படியும் சமாளிக்க முடியவில்லை. ஒருநாள் மொத்தமாக முடங்கிப்போனான். வீடு, வாசல், சொத்து, சுகம் எல்லாம் இழந்து நடு வீதிக்கு வந்துவிட்டான். விரக்தியில் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் மோசமான முடிவுக்கும் அவன் வந்திருந்தான். அதற்கு முன்னர். தனக்கு விடிவு காலம் பிறக்குமா என்று தெரிந்துகொள்ளும் ஏக்கத்திலும், நல்ல காலம் பிறக்கும் என்று தெரியவந்தால், தற்கொலை செய்துகொள்ளும் முடிவை தள்ளிப்போடலாம் என்ற எதிர்பார்ப்பிலும் குருநாதரைச் சந்திக்க வந்தான். ஒடுங்கிப்போன மனிதனாக குருவின் முன் நின்றான். குருவை வணங்கினான். “எனக்கு மறுவாழ்வு கிடைக்குமா ஸ்வாமிகளே” என கண்ணீருடன் கைகூப்பிக் கேட்டான். அதற்கு முன்பு பலமுறை செல்வந...

ரவா கேசரி

Image
ரவா கேசரி  தேவையான பொருட்கள்: ரவை – ஒரு டம்பளர் சர்க்கரை – 2 டம்பளர் தண்ணீர் – ஒன்றரை டம்பளர் நெய் – அரை டம்பளர் முந்திரிப் பருப்பு- 10 ஏலக்காய் – 4 கேசரி பவுடர் – ஒரு தேக்கரண்டி பன்னீர் – 2 தேக்கரண்டி செய்முறை: முந்திரியை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். ஏலக்காயை தூள் செய்து கொள்ளவும். நெய்யை உருக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து 2 தேக்கரண்டி நெய் ஊற்றி நறுக்கிய முந்திரியை பொன் நிறமாக வறுத்துக் கொள்ளவும். அதேநெய்யில் ரவையைக் கொட்டி நன்றாக வறுக்கவும். தண்ணீரைக் கொதிக்க வைத்து வறுத்த ரவையில் ஊற்றி, கட்டியாகாமல் நன்றாகக் கிளறவும். ரவை நன்றாக வெந்ததும்,சர்க்கரையை சேர்த்துக் கிளறவும். கேசரி பவுடரை தண்ணீல் கரைத்து ஊற்றவும், பன்னீரையும் சேர்க்கவும். உருக்கிய நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக கேசரியில் ஊற்றிக் கிளறிக் கொண்டே வரவும். வறுத்த முந்திரி, பொடித்த ஏலக்காயைச்சேர்த்துக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கி விடவும்.

வாழ்க்கை வாழ்வதற்கே!

வாழ்க்கை வாழ்வதற்கே! ஒரு கல்லூரியில் ஒன்றாக படித்த சில மாணவர்கள், படித்து முடித்து சில ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே கல்லூரியில் சந்திக்கின்றனர். அப்போது, கல்லூரி வாழ்க்கையைப் போல வெளி உலக வாழ்க்கை சந்தோசமானதாக இல்லை என்றும் வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கின்றது என்றும் அலுத்துக் கொள்கின்றனர்.  அப்போது அங்கு வந்த அவர்களது முன்னாள் பேராசிரியர் அவர்களை தன் வீட்டிற்கு தேநீர் விருந்துக்கு அழைக்கிறார். சுவையில் சிறந்த அவர் வீட்டு தேநீர் கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தமானது. அவரது வீட்டில் தேநீர் பல்வேறு விதமான கோப்பைகளில் பரிமாறப் படுகின்றது. சில கோப்பைகள் சாதாரணமானவை, சில கோப்பைகள் அழகானவை, சில கோப்பைகள் விலை உயர்ந்தவை, வேறு சிலவோ பிரத்யேகமாக கலை அழகோடு வடிவமைக்கப் பட்டவை.  அந்த மாணவர்கள், அழகற்ற கோப்பைகளை தவிர்த்து விட்டு அழகிய கோப்பைகளிலேயே தேநீர் அருந்த விரும்புகின்றனர். கலை வடிவம் மிக்க தேநீர் கோப்பைக்காக அவர்களிடையே சிறிய போட்டி கூட நடக்கிறது. ஒருவழியாக, தமக்கான கோப்பையை தேர்வு செய்து, மாணவர்கள் அனைவரும் தேநீர் அருந்தும் போது அங்கு வந்த பேராசிரியர் சிறிய விளக்க உ...

மட்டன் நெய் வறுவல்.....

Image
தேவையான பொருட்கள் 500 கிராம் மட்டன் அறை கப் தயிர் அறை தேக்கரண்டி மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு உப்பு தேவைக்கு ஏற்ப  நெய் வறுவல் மசாலாவிற்கு 6 காய்ந்த மிளகாய் 2 கிராம்பு ஒரு தேக்கரண்டி முழு கருப்பு மிளகுத்தூள் ஒரு தேக்கரண்டி வெந்தய விதைகள் 2 தேக்கரண்டி தனியா விதைகள் ஒரு தேக்கரண்டி சீரகம் 6 கிராம்பு பூண்டு மற்ற பொருட்கள் ஒரு தேக்கரண்டி புளி பேஸ்ட் 2 தேக்கரண்டி நெய் 2 துளிர் கறிவேப்பிலை 2 தேக்கரண்டி வெல்லம் மட்டன் நெய் வறுவல் செய்முறை: மட்டன் நெய் வறுவல் செய்முறையைத் தொடங்க முதலில் ஆட்டிறைச்சியை மரைனேட் செய்வோம்.  ஆட்டிறைச்சியை மரைனேட் செய்ய ஒரு கலவை பாத்திரத்தில், ஆட்டிறைச்சி, தயிர், மஞ்சள் தூள், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.  நன்றாக கலந்த மட்டன் துண்டுகள் மீது மசாஜ் செய்யவும், குறைந்தபட்சம் 30 நிமிடங்கள். நெய் வறுவல் மசாலா செய்ய: ஒரு வாணலியை மிதமான சூட்டில் சூடாக்கவும், இதனுடன் காய்ந்த மிளகாய், மிளகுத்தூள், கிராம்பு, மேத்தி விதைகள், கொத்தமல்லி விதைகள் மற்றும் சீரகம் சேர்க்கவும்.  சுமார் 4 முதல் 6 நிமிடங்கள் வரை அல்லது மசாலா வ...

கிராமத்து கோழி குழம்பு

Image
தேவையான பொருட்கள்:   கோழிக்கறி - அறை கிலோ வெங்காயம் - 4 பச்சை மிளகாய் - 4 தக்காளி - 4 சிவப்பு மிளகாய் - 8 தனியா - ஒரு கைப்பிடி மஞ்சள் தூள் - அறை தேக்கரண்டி மிளகு - ஒரு தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி சோம்பு - அறை தேக்கரண்டி இஞ்சி - ஒரு துண்டு பூண்டு - 1 கசகசா - ஒரு தேக்கரண்டி தேங்காய் - அறை மூடி கிராம்பு, பட்டை, ஏலக்காய் - சிறிதளவு எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி கறிவேப்பிலை - 1 கொத்து உப்பு - தேவையான அளவு செய்முறை:   கோழிக்கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், தனியா, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.   இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்து கொள்ளவும். வெங்காயத்தை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமானால் சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ளலாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.   அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், ஏலக்காயை உரித்து போட்டு, அத்துடன் பட்டை மற்றும் கிராம்பையும் போடவும். சிவந்ததும் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு நன்கு ...

தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி

Image
தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி செய்வது எப்படி.... செய்முறை : முதலில் சிக்கனை நன்கு நீரில் கழுவி ஓரளவிற்கு பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் வெட்டிய சிக்கனை போட்டு, கெட்டியான தயிர், மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து பிரட்டி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சோம்பு, பட்டை, ஏலக்காய், அன்னாசிப்பூ, கிராம்பு அனைத்தையும் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.  பின்பு பாசுமதி அரிசியை கழுவி, நீரில் 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.  அதன் பிறகு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின்பு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்க வேண்டும்.  அதன் பிறகு அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி விட வேண்டும். பின்பு ஊற வைத்துள்ள சிக்கனை அதனுடன் போட்டு 5 நிமிடம் நன்கு கிளறி, சிக்கனில் மசாலா சேரும் வரை பிரட்டி விட்டு15 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.  பின்னர் குக்கரில் வாணலியில் வேக வ...

தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி

Image
தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி செய்வது எப்படி.... செய்முறை :  முதலில் சிக்கனை நன்கு நீரில் கழுவி ஓரளவிற்கு பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.  பின்பு ஒரு பாத்திரத்தில் வெட்டிய சிக்கனை போட்டு, கெட்டியான தயிர், மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து பிரட்டி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சோம்பு, பட்டை, ஏலக்காய், அன்னாசிப்பூ, கிராம்பு அனைத்தையும் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.  பின்பு பாசுமதி அரிசியை கழுவி, நீரில் 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.  அதன் பிறகு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின்பு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்க வேண்டும்.    அதன் பிறகு அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி விட வேண்டும்.   பின்பு ஊற வைத்துள்ள சிக்கனை அதனுடன் போட்டு 5 நிமிடம் நன்கு கிளறி, சிக்கனில் மசாலா சேரும் வரை பிரட்டி விட்டு15 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.    ...

சிந்தாமணி சிக்கன்

Image
சிந்தாமணி சிக்கன் சிந்தாமணி சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்: நாட்டு கோழி - ஒரு கிலோ சின்ன வெங்காயம் - முக்கால் கிலோ பூண்டு - 8 பல் காய்ந்த மிளகாய் - 15 இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் துாள் - ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப கடுகு - ஒரு டீ ஸ்பூன் நல்லெண்ணெய் - 300 மில்லி செய்முறை சிக்கனை சுத்தம் செய்து, துண்டுகளாக்கி, மஞ்சள் துாள் கலந்து ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சேர்த்து, வெடித்ததும், நருக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து, கல் உப்பு போட்டு பொன்னிறமாக வதக்கி பின், காம்பு, விதை நீக்கிய காய்ந்த மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும். அதன் பின், கோழி துண்டுகளை சேர்த்து பாதி அளவு வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, மூடி போட்டு வேக விட வேண்டும். தண்ணீர் ஊற்ற வேண்டாம். சிக்கன், வெங்காயத்தில் இருந்து பிரியும் நீர் போதும். அடி பிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளறவும். சிக்கன் வேக அதிக நேரம் ஆகும். எண்ணெய் பிரியும் பதத்தில், உப்பு சரி பார்த்து பரிமாறவும். அதிக மசாலா சேர்க்காத சிந்தாமணி சிக்கன் குழம்பு அருமையாக இருக்கும்.

காரசாரமான முட்டை பொடிமாஸ் ரெசிபி

Image
எப்பவும் ஒரே மாதிரி பொடிமாஸ் செய்யாம.. ஒருவாட்டி இப்படி செய்யுங்க.. டேஸ்ட் சும்மா வேற லெவல்ல இருக்கும்... உங்கள் வீட்டில் தினமும் முட்டை செய்வீர்களா? அதுவும் அந்த முட்டையை பெரும்பாலும் பொடிமாஸ் செய்து தான் சாப்பிடுவீர்களா? எப்போதும் ஒரே மாதிரி முட்டை பொடிமாஸ் செய்வீர்களானால், அடுத்தமுறை சற்று வித்தியாசமான சுவையில், அதுவும் சற்று காரசாரமாக செய்து சாப்பிடுங்கள். இந்த காரமான முட்டை பொடிமாஸ் சப்பாத்தி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் இந்த பொடிமாஸ் செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். பேச்சுலர்கள் இந்த பொடிமாஸை ஒருமுறை செய்தால், அடிக்கடி செய்து சாப்பிடுவார்கள். அந்த அளவில் வாய்க்கு ருசியாகவும், செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும். காரசாரமான முட்டை பொடிமாஸ் ரெசிபியின் செய்ய தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம் - 10 பூண்டு - 10 பல் புளி - சிறிய துண்டு மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன் சீரகத் தூள் - அறை டீஸ்பூன் சோம்பு தூள் - அறை டீஸ்பூன் கரம் மசாலா அறை டீஸ்பூன் பொடிமாஸ் செய்வதற்கு... எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன் முட்டை - 5 உப்பு - சுவைக்கேற்ப எண்ணெய் - ஒரு டேபிள் ஸ...

திருமண வாழ்க்கை

திருமண வாழ்க்கை ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார். ஒருநாள் ஆபீஸ் போய் வேலை செய்து பார். சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம் என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார். அவள் ஒருநாள் பொறுமை இழந்து, ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக்கோங்க. காலையில் குளிப்பாட்டி சாப்பிட வச்சு, வீட்டுப் பாடங்கள் சொல்லிக்கொடுத்து, சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க. அதோடு சமைப்பது, துவைப்பது எல்லாத்தையும் செஞ்சுதான் பாருங்களேன் என எதிர் சவால்விட்டாள். கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்.  அவன் வீட்டில் இருக்க, இவள் ஆபீஸ் போனாள். ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ். முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள். வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய் வருபவர்களை கண்டித்தாள். கணக்கு வழக்குகளைப் பார்த்தாள். மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப் புறப்பட நினைத்தபோது, ஓர் அலுவலரின் மகள் திருமண வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல, பரிசுப் பொருள் வாங்கிக்கொண்டு கல்யாண மண்டபத்திற்கு சென்றாள். கணவர் வராததற்கு பொய்யான காரணம் ஒன்றை சொல்லிவிட்டு, மணமக்களின் கட்டாயத்தால் சாப்பிட செ...

நாட்டுக்கோழி குழம்பு

நாட்டுக்கோழி குழம்பு செய்ய தேவையான பொருட்கள் நாட்டுக்கோழி  - ஒரு கிலோ எண்ணெய் - 100 கிராம் சின்ன வெங்காயம் - 300 கிராம் தக்காளி - 100 கிராம் இஞ்சி பூண்டு - 20 கிராம் தேங்காய் - அரை மூடி சக்தி சிக்கன் மசாலா 40 கிராம் கடுகு - ஒரு டீஸ்பூன் கருவேப்பிலை - கால் கைப்பிடி செய்முறை முதலில் குக்கரில் எண்ணெய் ஊற்றி சுடான பின் கடகு கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின்னர் தீயை குறைத்து சின்ன வெங்காயத்தை ஐந்து நிமிடம் பொன்னிறமாக வதக்கவும். பிறகு தேவையான அளவுக்கு உப்பு சேர்க்கவும். பின்பு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். அடுத்து தக்காளி சேர்த்து மசியும் அளவுக்கு வதக்கவும். பின்னர் நாட்டுக்கோழி மற்றும் மசாலா சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி விட்டு அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி ஐந்து விசில் விடவும். கடைசியாக அரை மூடி தேங்காய் பால் சேர்த்து  மூன்று வீசில் விட்டு, உப்பு சரி பார்த்து மல்லி சேர்த்து பரிமாறவும்