கொளுத்தும் கோடை காலம்

கொளுத்தும் கோடை காலம்

எந்த வருஷமும் இந்த மாதிரி வெயில் இல்லப்பா

நான் சின்ன பிள்ளையா இருக்குறப்ப பெரியவங்க சொல்லி கேட்டிருக்கேன்
இப்ப வரைக்கும் இந்த வசனத்த எல்லாரும் சொல்லிட்டுதான் இருக்கோம்

காலத்தை நாமே சுழல செய்கிறோம் இறைவனின் வாக்குக்கு ஏற்ப கோடை,காற்று,மழை, பனி என காலங்கள் மாறி மாறி வரத்தான் செய்யும்

இந்த கால மாற்றங்களின் பிண்ணனியில் ஒவ்வொரு மாறுதல்களுக்கு பின்னும் மாபெரும் காரணம் உண்டு அதில் நாம் அறிந்தது சில அறியாதது பல

இந்த கால மாற்றங்கள் நன்மையை கொண்டு வருவது போலவே துணையாக சின்ன சின்ன சங்கடங்களையும் சேர்த்தே கொண்டு வரும்

அந்த சங்கடங்களையும் சரி செய்யும் வசதியையும் கருணையாளன் அல்லாஹ் சேர்த்தே நமக்கு அளித்திருக்கிறான்

எல்லா சீசனும் மாம்பழ சீசன் என்பது முதாளித்துவத்தின் கோணல் புத்தி

எந்த எந்த காலத்தில் மனிதனுக்கு என்ன என்ன தேவையோ அதை அளிப்பது இறைவனின் கருணை

அந்த வகையில்
குழந்தைகள் மேல் பழியை போட்டு அப்படியே கொஞ்சம் நாமலும் சாப்பிட்டுக்கலாம் என துரித உணவுகள், செயற்கை உணவுகள், செயற்கை பானங்கள் (soft drink,) போன்றவற்றை சாப்பிட்டு உடல் உபாதைகளை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்காமல்

நமக்கே நமக்காக இறைவன் தந்த
செள செள, பூசணிக்காய், சொரக்காய் போன்ற நீர்சத்து அதிகம் உள்ள காய்கறிகளை உணவிலும்...

தாகத்திற்கு
இளநீர், தர்பூசனி, நொங்கு, வெள்ளரி காய்,வெள்ளரிபழம், கம்மங்கூழ் , மோர் போன்ற பானங்களை அருந்துவது நம் விவசாயிகளுக்கும், சிறு வியாபாரிகளுக்கும் மட்டுமா நல்லது?! நமக்கும் அதுதான் நமக்கும் நல்லது.

#போனவருஷத்தோட
#இந்தவருஷம்
#கொஞ்சம்வெயில்
#அதிகம்தான்

- கா. பைசல் அஹமது
  திருச்சி

Comments

Popular posts from this blog

கண்களையும் கவனியுங்கள்

தாம்பத்திய உறவில் செய்யக்கூடாதவை பற்றி அறிவீரா !!?

ஆணவத்தில் ஆடாதிங்க’... அனிதா சம்பத்தை கிண்டலடித்த டான்ஸ் மாஸ்டருக்கு கணவர் பதிலடி!!