ஆசிரமத்துக்கு அருகே இருந்த ஊர் ஒன்றில் மிகப்பெரிய செல்வந்தன் ஒருவன் இருந்தான். நான்கைந்து வியாபாரங்கள் செய்து வந்தான் அவன். அவனது போதாத காலம். ஒரு வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. அதைச் சரி செய்வதற்குள் கவனம் பிசகி, மற்ற தொழில்களிலும் அடுத்தடுத்து சரிவுகளைச் சந்தித்தான். பிரச்னைகளைச் சமாளிக்க வாங்கிய கடன்கள் அவனது நிம்மதியைக் குலைத்தன. தொடர்ந்து கடன் மேல் கடனாக வாங்கிக்கொண்டே போனான். அப்படியும் சமாளிக்க முடியவில்லை. ஒருநாள் மொத்தமாக முடங்கிப்போனான். வீடு, வாசல், சொத்து, சுகம் எல்லாம் இழந்து நடு வீதிக்கு வந்துவிட்டான். விரக்தியில் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் மோசமான முடிவுக்கும் அவன் வந்திருந்தான். அதற்கு முன்னர். தனக்கு விடிவு காலம் பிறக்குமா என்று தெரிந்துகொள்ளும் ஏக்கத்திலும், நல்ல காலம் பிறக்கும் என்று தெரியவந்தால், தற்கொலை செய்துகொள்ளும் முடிவை தள்ளிப்போடலாம் என்ற எதிர்பார்ப்பிலும் குருநாதரைச் சந்திக்க வந்தான். ஒடுங்கிப்போன மனிதனாக குருவின் முன் நின்றான். குருவை வணங்கினான். “எனக்கு மறுவாழ்வு கிடைக்குமா ஸ்வாமிகளே” என கண்ணீருடன் கைகூப்பிக் கேட்டான். அதற்கு முன்பு பலமுறை செல்வந...
கண்களையும் கவனியுங்கள் நமது சந்தோஷம், துக்கம் எதுவானாலும் அதை காட்டிக் கொடுப்பது கண்கள் தான். அப்படிப்பட்ட கண்கள் புத்துணர்ச்சியுடன் இருந்தால் தானே பார்க்க அழகாக இருக்கும். கண்களின் அழகை பராமரிக்க தினமும் எட்டு மணிநேரம் தூக்கம் மட்டுமல்லாமல் கால்சியம், விட்டமின்கள் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். அதாவது பால், பால் உணவுகள், கீரை வகைகள், முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப்பழங்கள் பச்சை காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். கண்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடிகாரம் சுற்றும் முறையிலும், எதிர்முறையிலும் மூன்று முறை சுற்ற வேண்டும். மேலும் அருகில் உள்ள பொருட்களை பார்த்துவிட்டு தூரத்தில் உள்ள பொருட்களை பார்க்க வேண்டும். கட்டைவிரலை நடுவில் வைத்துக்கொண்டு அதனை இடமாகவும் வலமாகவும் விரலை மட்டும் நகர்த்தி தலையை திருப்பாமல் வெறும் பார்வையை மட்டும் திருப்பி பார்க்க வேண்டும். தினமும் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்தால் கண்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும். நீண்ட நேரம் கணனி அல்லது தொலைக்காட்சி முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி ஏதேனும் பச்சை வெளியைப் பார்க்கலாம் அல்லது கண்களுக்கு குளிர்...
காதலுக்காக காத்திருப்பது சுகமே! உண்மையான காதலுக்காக காத்திருப்பதில் ஒரு அழகு இருக்கிறது. அவ்வாறு காத்திருப்பவரையும் அழகுபடுத்தி, அவர் பலவிதமான நல்காரியங்களை செய்ய வைக்கிறது. ஆகவே உண்மையான காதலுக்காக ஏன் காத்திருக்க வேண்டும் என்பதை பார்க்க காதல் என்பது ஒரு இனிமையான அனுபவம். பருவம் வந்த ஒரு இளைஞனும், ஒரு இளம் பெண்ணும், ஒருவருக்கு ஒருவர் மையல் கொள்ளும் போது இந்த காதல் துளிர்க்கிறது. உண்மையான காதல் வளர்வதற்கு சில முக்கியமான காரணிகள் தேவைப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் காதலுக்காக காத்திருப்பது ஆகும். காதலுக்காகக் காத்திருப்பதைப் பற்றி ஏராளமான கருத்துகளும், விமர்சனங்களும் உள்ளன. சிலர் காதலுக்காகக் காத்திருப்பது என்பது ஒரு போற்றத்தக்க மதிப்பீடு என்றும், மதிப்புக்குரியது என்றும் நம்புகின்றனர். அதே நேரத்தில் வேறு சிலரோ, இது நேரத்தை வீணடிக்கும் செயல் என்று கருதுகின்றனர். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், காதலில் காத்திருப்பது என்பது நமது முழு ஆற்றலையும் செலவழித்து, இறுதியில் ஒன்றுமே பெறாமல் இழப்பது ஆகும் என்று நம்புகின்றனர். பொதுவாக, ஒருவருடைய காதலுக்காக மற்றும் அவருடைய காதல் உறவிற்காக அவர்...
Comments
Post a Comment