கண்களையும் கவனியுங்கள் நமது சந்தோஷம், துக்கம் எதுவானாலும் அதை காட்டிக் கொடுப்பது கண்கள் தான். அப்படிப்பட்ட கண்கள் புத்துணர்ச்சியுடன் இருந்தால் தானே பார்க்க அழகாக இருக்கும். கண்களின் அழகை பராமரிக்க தினமும் எட்டு மணிநேரம் தூக்கம் மட்டுமல்லாமல் கால்சியம், விட்டமின்கள் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். அதாவது பால், பால் உணவுகள், கீரை வகைகள், முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப்பழங்கள் பச்சை காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். கண்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடிகாரம் சுற்றும் முறையிலும், எதிர்முறையிலும் மூன்று முறை சுற்ற வேண்டும். மேலும் அருகில் உள்ள பொருட்களை பார்த்துவிட்டு தூரத்தில் உள்ள பொருட்களை பார்க்க வேண்டும். கட்டைவிரலை நடுவில் வைத்துக்கொண்டு அதனை இடமாகவும் வலமாகவும் விரலை மட்டும் நகர்த்தி தலையை திருப்பாமல் வெறும் பார்வையை மட்டும் திருப்பி பார்க்க வேண்டும். தினமும் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்தால் கண்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும். நீண்ட நேரம் கணனி அல்லது தொலைக்காட்சி முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி ஏதேனும் பச்சை வெளியைப் பார்க்கலாம் அல்லது கண்களுக்கு குளிர்...
ஒவ்வொரு தினம் கொண்டாடவும் ஒரு தனிப்பட்ட நபரோ அல்லது சம்பவமோ காரணமாக இருக்கும். நட்பு தினம் கொண்டாட ஏதேனும் காரணம் ஒன்று வேண்டுமா என்ன? உலகத்தில் பிறந்த அனைவருக்கும் நட்பு என்பது இல்லாமல் இருக்காது. எனவே எல்லோருமே கொண்டாடும் ஒரு தினம்தான் இந்த நட்பு தினம் நண்பர்கள் தின வரலாறு..! இதற்கு முன்னோடியாக அல்லது வழிகாட்டியாக இருந்தது என்னவென்றால், அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸில் 1935ஆம் ஆண்டு நட்பு தினம் பற்றிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு முதல் ஞாயிற்றுக் கிழமை கட்டாய விடுமுறை அறிவித்து, அன்றைய தினத்தை நட்பு தினமாகக் கொண்டாட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. அன்று முதல் அமெரிக்காவில் நட்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நம் இலக்கியங்கள் சொல்லித் தந்த நட்பின் இலக்கணம்..! சங்க காலத்தில், பாண்டிய நாட்டைச் சேர்ந்த புலவர் பிசிராந்தையாரும், சோழ நாட்டு மன்னன் கோப்பெருஞ்சோழனும் ஒருவரையொருவர் பார்க்காமலேயே நட்பை வளர்த்து நண்பர்களாக வாழ்ந்த வரலாற்றை நாம் மறக்கமுடியுமா..? கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து மரணமெய்திய செய்தி கேட்டு, பிசிராந்...
காதலுக்காக காத்திருப்பது சுகமே! உண்மையான காதலுக்காக காத்திருப்பதில் ஒரு அழகு இருக்கிறது. அவ்வாறு காத்திருப்பவரையும் அழகுபடுத்தி, அவர் பலவிதமான நல்காரியங்களை செய்ய வைக்கிறது. ஆகவே உண்மையான காதலுக்காக ஏன் காத்திருக்க வேண்டும் என்பதை பார்க்க காதல் என்பது ஒரு இனிமையான அனுபவம். பருவம் வந்த ஒரு இளைஞனும், ஒரு இளம் பெண்ணும், ஒருவருக்கு ஒருவர் மையல் கொள்ளும் போது இந்த காதல் துளிர்க்கிறது. உண்மையான காதல் வளர்வதற்கு சில முக்கியமான காரணிகள் தேவைப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் காதலுக்காக காத்திருப்பது ஆகும். காதலுக்காகக் காத்திருப்பதைப் பற்றி ஏராளமான கருத்துகளும், விமர்சனங்களும் உள்ளன. சிலர் காதலுக்காகக் காத்திருப்பது என்பது ஒரு போற்றத்தக்க மதிப்பீடு என்றும், மதிப்புக்குரியது என்றும் நம்புகின்றனர். அதே நேரத்தில் வேறு சிலரோ, இது நேரத்தை வீணடிக்கும் செயல் என்று கருதுகின்றனர். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், காதலில் காத்திருப்பது என்பது நமது முழு ஆற்றலையும் செலவழித்து, இறுதியில் ஒன்றுமே பெறாமல் இழப்பது ஆகும் என்று நம்புகின்றனர். பொதுவாக, ஒருவருடைய காதலுக்காக மற்றும் அவருடைய காதல் உறவிற்காக அவர்...
Comments
Post a Comment