இந்தியன் வங்கியின் புதிய திட்டம்! செம கடுப்பில் வாடிக்கையாளர்கள்!


காகித பயன்பாடுகளைக் குறைக்கும் வகையில் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் மின்னணு முறையில் மாற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியன் வங்கியின் அலுவலகப் பணிகளை  ஐபி இ நோட் எனும்  புதிய மின்னணு சேவையை  அறிமுகப்படுத்தியுள்ளது.

வங்கி சேவைகளில்  இந்தியன் வங்கி வலிமையான தகவல் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது எனவும்  மொபைல் செயலி, நெட் பேங்கிங், கியூஆர் கோட் அடிப்படையில் பண பரிவர்த்தனை சேவைகள் வழங்கப்பட்டு வருவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த திட்டத்தின் மூலம் காகிதங்கள், பிரிண்டிங் ஆகியவற்றுக்கு செய்யப்படும் செலவுகள் குறைக்கப்படுவதோடு அலுவலக பணிகளும் விரைவாக செய்து  முடிக்கப்படும் என்றும் கூறினார்.

இந்த திட்டத்தை  மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் இந்தியன் வங்கியின் செயல் இயக்குநர்கள் முன்னிலையில் துவங்கி வைக்கப்பட்டது.
ஏற்கெனவே பெரும்பாலான அரசு வங்கிகளின் கிளைகளில் காலதாமதம் ஏற்படுவதாக பொதுமக்களிடையே நீண்ட காலங்களாக புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ள நிலையில், இந்த மாற்றம் வாடிக்கையாளர்களை எந்தளவிற்கு கவர்ந்திழுக்கும் என்பது போகப் போகத் தான் தெரியும். 

Comments

Popular posts from this blog

கண்களையும் கவனியுங்கள்

தாம்பத்திய உறவில் செய்யக்கூடாதவை பற்றி அறிவீரா !!?

ஆணவத்தில் ஆடாதிங்க’... அனிதா சம்பத்தை கிண்டலடித்த டான்ஸ் மாஸ்டருக்கு கணவர் பதிலடி!!